பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் நடிகருமான ஆனந்த கண்ணன் மறைந்தார்!
Views : 1845
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன்(48). சிங்கப்பூர் தமிழனான ஆனந்த கண்ணன், அந்நாட்டில் ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் தமிழகம் வந்த அவர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இணைந்து மிகவும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து சிந்து பாத், விக்கிரமாதித்தன் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் சினிமா வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரையிலும் வலம் வந்த ஆனந்த கண்ணனுக்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படம் மட்டுமே ஓரளவு பாஸிட்டிவாக அமைந்தது. இவர் நடிப்பில் உருவான முள்ளும் மலரும், இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஆகிய படங்கள் ரிலீஸாகவில்லை.
தனக்கான வாய்ப்புகள் குறையவே சிங்கப்பூர் சென்ற ஆனந்த கண்ணன் மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை முறையாக பயின்ற ஆனந்த கண்ணன், ஆனந்த கூத்து என்ற பயிற்சி அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 16 நேற்று, ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாத நிலையில் அரிதான புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட்பிரபு இரங்கல்
ஆனந்த கண்ணன் இறந்த தகவலை அவரது நண்பர் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
ஆனந்த கண்ணன் மறைவுக்கு ஏராளமான ரசிகர்களும் தங்களது இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
JOIN IN TELEGRAM
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்
“ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்
Apr 05, 2024 - 2 weeks ago
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.
வரவிருக்கும்
வரவிருக்கும்