திருவிழாவுக்கு சென்றுவிட்டு தாயுடன் நடந்து சென்ற 19வயது பெண்ணை நாசம் செய்த கும்பல்!

திருவிழாவுக்கு சென்றுவிட்டு தாயுடன் நடந்து சென்ற 19வயது பெண்ணை நாசம் செய்த கும்பல்!

Views : 1782

தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் தன்னை சாதி ரீதியில் விமர்சித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கும் முடிவே இல்லை என்பது போல அவ்வப்போது அதிரவைக்கும் பாலியல் குற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
திருமணம் ஆகி சில மாதங்களே ஆன இளம் தலித் பெண் ஒருவர், தனது தாயுடன் நடந்து சென்ற போது 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் அருகே பிபி நகர் எனும் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் தலித் பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. தனது தாய் வீட்டுக்கு வந்த அந்த 19 வயது பெண், கடந்த புதன் கிழமையன்று திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடன் சென்றிருக்கிறார். திருவிழாவை முடித்துவிட்டு நள்ளிரவில் தனியாக தனது தாயுடன் நடந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த 19வயது பெண் மட்டும் தனியாக ஒதுங்கியிருக்கிறார். திடீரென மகளின் அலரல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் பதறித்துடித்த அப்பெண்ணின் தாய், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடோடி சென்று பார்த்த போது அவரால் தனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கே தேடிப்பார்த்துவிட்டு மகளை காணாததால் தாமதிக்காமல் தனது வீட்டுக்கு சென்று நடந்தவற்றை குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அந்தப் பெண் தொலைந்து போன இடத்துக்கு வந்து தேடிப்பார்த்தபோது அங்குள்ள புதரில் மயக்கமடைந்த நிலையில் அந்த 19 வயது பெண் இருப்பதை பார்த்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த அப்பெண் கூறுகையில், தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் தன்னை சாதி ரீதியில் விமர்சித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து 19 வயது பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார், அதில் தன்னை நாசம் செய்ததில் தனக்கு அடையாளம் தெரிந்த இருவரின் பெயர்களை புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண் சுட்டிக்காட்டிய இருவரை கைது செய்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 2 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 3 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 2 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்