மனநலம் பாதித்தவர் தந்தைக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் பரந்த தகவல்!
Views : 1741
திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்கச் சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.
செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்குச் சென்றார்.
காக்களூரில் அவரை மறித்த காவல்துறையினர் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியது குறித்து அவர் முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் காவல் ஆய்வாளர், பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததுடன், அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்
“ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.