டிடிவி தினகரனை ஓரங்கட்டினால் சசிகலாவுடன் இணைந்து போக எடப்பாடி தயார்! ரகசிய டீலிங்!

டிடிவி தினகரனை ஓரங்கட்டினால் சசிகலாவுடன் இணைந்து போக எடப்பாடி தயார்! ரகசிய டீலிங்!

Views : 1964

பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்து எட்டு மாதங்களான நிலையில் திடீரென தற்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கும், எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கும் சென்று வந்துள்ளார். அதிமுகவின் கொடியை ஏற்றி பொதுச் செயலாளர் என்று தனது பெயர் போட்ட கல்வெட்டையும் அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக தற்போதைய அதிமுக தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்ட உள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லியுடன் நெருக்கம் காட்டி அந்த நம்பிக்கையிலேயே சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். டெல்லி சென்றாலோ, டெல்லி சென்று திரும்பினாலோ சசிகலாவுக்கு எதிராக பேசுவதை இருவரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். டெல்லியும் சசிகலாவுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறது. அவரது சொத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடக்கப்பட்டு வருகின்றன.

ஆனபோதும் கட்சியில் இணைவதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக கால் ஊண்ற காரணமாக இருந்த ஒருவர் மூலம் சமரச பேச்சுவார்த்தையை சசிகலா நடத்தி வந்ததாக சொல்கிறார்கள். எடப்பாடி தரப்பிடம் அவர் தான் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும் கூறுகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் சசிகலா சில சமரசங்களுக்கும் சம்மதித்துள்ளதாக கூறுகின்றனர். சசிகலாவை உள்ளே விட்டால் மன்னார்குடி குடும்பமே உள்ளே நுழைந்து நமது தலைமேல் அமர்ந்துகொள்ளும் என எடப்பாடி மட்டுமல்லாமல் பன்னீர் செல்வமும் நினைப்பதாக அப்போதே தகவல் வெளியானது. தற்போது சசிகலா தான் மட்டுமே கட்சிக்குள் வருவதாக தெரிவித்துள்ளாராம். அதனாலே சனி, ஞாயிற்றுக் கிழமை சசிகலா முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகளில் டிடிவி தினகரனையும் அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா உடனடியாக தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அதை எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாக பார்ப்பார் என்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவி மட்டும் போதும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை மிக பலமான பதவி அதுதான். அனைத்து அதிகாரங்களும் அந்த பதவிக்கு தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிற்கவும் ஓபிஎஸ், இபிஎஸ் தயாராக இல்லையாம். எனவே அந்தப் பதவியின் அதிகாரங்களை குறைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

திரைமறைவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளும், தூது படலமும் சரியாக சென்றால் மேற்சொன்ன பாதையில் சசிகலாவும், எடப்பாடியும் செல்வார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள் இரு பக்க நகர்வுகளையும் அறிந்தவர்கள்.


JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 4 weeks ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 2 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 4 weeks ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்