அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்!
Views : 1790
அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார்.
செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவருமாகவும் இருந்தவர் பழனியப்பன். அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அவர் .ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் நெக்கம் காட்டியதால் அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடதக்கது.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.