வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ்...
Views : 1771
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.
அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் 'நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.