உடலுறவுக்கு மனைவி மறுத்ததால், கணவன் தற்கொலை!

உடலுறவுக்கு மனைவி மறுத்ததால், கணவன் தற்கொலை!

Views : 1798

நேற்று நள்ளிரவில் அவருடைய மனைவியுடன் இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தார் பின்னர் தாம்பத்தியம் சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 27. இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும் 25 வயது பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் கணவர் சமீப நாட்களாக மனவருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

நேற்று நள்ளிரவில் அவருடைய மனைவியுடன் இரவு 12 மணிவரை பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தாம்பத்தியம் சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோபம் அடைந்த ராஜேந்திரன் வீட்டின் முன் ஹாலில் படுத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மனமுடைந்து இரவு 1 மணிக்கு மேல் , படுக்கை அறைக்குச் சென்று வீட்டு சீலிங்கில் உள்ள ஊக்கில் தூக்கு மாட்டி கொண்டதாக தெரிகிறது

காலை 7 மணிக்கு மனைவி எப்பொழுதும் போல அவருடைய ரூமுக்கு சென்று பார்க்கும் போது படுக்கை அறையில் தூக்கு மாட்டி கொண்டு இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

உடனடியாக வந்த உறவினர் செந்தில்குமார் தூக்கில் இருந்து இறக்கி கட்டிலில் படுக்க வைத்து உள்ளார். பின்னர் பேரூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் தாம்பத்தியத்திற்கு மனைவி சம்மதிக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தற்கொலைக்கான காரணத்தை உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார். திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 2 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்