ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

Views : 2029

பல்வேறு மொழிகளில் உருவாகும் ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'பதாய் ஹோ', 'தல்வார்', 'ராஷி' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த நிறுவனம் ஜங்க்லீ பிக்சர்ஸ். தற்போது தங்களுடைய புதிய படத்தை அறிவித்துள்ளது. ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கைக் கதையை அனைத்து மொழிகளிலும் படமாக உருவாக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.



தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை உருவாக்கியவர் பி.ராஜகோபால். அவர் மீது அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களைச் சுமத்திய ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோ, ஆடியோ, உண்மைச் செய்திகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர் ராஜகோபால். அப்படிப்பட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்தில் சிக்கியதும், அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுமான இந்தச் சம்பவங்கள், உண்மையான ஆதாரப் பின்னணியில் இப்படத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தப் படம் தொடர்பாக ஜீவஜோதி சாந்தகுமார் கூறியிருப்பதாவது:

"எனது வாழ்வில் அடைந்த துன்பங்களைத் தாண்டி, உணர்வுபூர்வமிக்க, சட்டத்தின் வழியிலான எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை ஜங்க்லீ பிக்சர்ஸ் படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. எனது கதையைப் பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்"

இவ்வாறு ஜீவஜோதி சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயரை இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 2 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 3 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 2 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்