அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த்

Views : 1760

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.1 மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைமை குறித்து மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும், அரசியலில் ஈடுபடும் நோக்கில் மக்கள் மன்றத்தை தொடங்கி பல பதவிகள், சார்பு அணிகள் உருவாக்கியதாகவும் கூறி உள்ளார். கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டு உள்ள அவர், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக தெரிவித்து உள்ளார்.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,....இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பு அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும், தனது அறிக்கையின் இறுதியில் வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.


JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 1 week ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 1 week ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 1 day ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.