டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை, 14,000 ரன்கள்

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை, 14,000 ரன்கள்

Views : 1754

டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ் கெய்ல், ரசிகர்களால் ’யுனிவெர்சல் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டிராபி உள்ளிட்ட பல்வேறு டி20 தொடர்களில் கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.

இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 67 ரன்கள் விளாசியபோது அவர், இந்த மைல்கல்லை எட்டினார்.

37.55 சராசரியுடன், 1,083 பவுண்டரிகள், 1,028 சிக்சர்களுடன் இந்த சாதனையை கெய்ல் படைத்துள்ளார். அதே போல், 22 சதங்களையும் கெய்ல் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள், ஒரு போட்டியில் அதிக ரன்கள், அதிக சதங்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகள் கெய்ல் வசம் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் யுனிவர்சல் பாஸின் புதிய சாதனைக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 1 week ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 1 week ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 19 hours ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.