பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

Views : 1845

சின்னத்திரை வரலாற்றில், மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு சிக்கக்களுக்கிடையே, பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது.


கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த உடனேயே அடுத்த சீசன் எப்போது வரும் என்ற கேள்வி எழும்பியது. 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியும் தொடங்கி விட்ட நிலையில், ஊரடங்கும் தளர்வுகளுடன் இருக்கின்ற சூழலில். அடுத்த சீசன் எப்போது தொடங்கப்போகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 க்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுவதும் நீங்காத சூழலில், நிகழ்ச்சி தொடக்கம் பற்றி இன்னும் முடிவு செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால், சமீபத்திய கிடைத்துள்ள தகவல், பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.


ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும், பிக்பாஸ் 5 ஆவது சீசனுக்கு லோகோ தயாராகி விட்டது என்றும், இந்த மாதம் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம்.

அது மட்டுமின்றி, கடந்த சீசனைப் போலவே, இந்த சீசனிலும் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், சீரியல் நடிகர் ஒருவர் பிக்பாசில் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒருவர், இந்த சீசனில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது. மற்ற பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல், புதிய செட், நிகழ்ச்சி தொடக்கம், அது மட்டுமின்றி, நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொகுத்து வரும் நடிகர், பன்முகக் கலைஞர் கமலஹாசனின் கெட்டப் போன்றவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும்.


அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருப்பு, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது, என்ற மிகப்பெரிய திருவிழாவி கலந்து கொள்வது போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் இருக்கும்.


கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவராஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 2 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 3 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 2 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்