மதுசூதனன் காலமானார்: அதிமுகவினர் அதிர்ச்சி!

மதுசூதனன் காலமானார்: அதிமுகவினர் அதிர்ச்சி!

Views : 1765

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 81. மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

தீவிர எம்ஜிஆர் விசுவாசியான மதுசூதனன் 1991ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது மட்டுமல்லாமல், ஜெயலலிதா கேபினட்டில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதிமுகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளராகவும் மதுசூதனன் பொறுப்பு வகித்துள்ளார். 2010ஆம் ஆண்டு அதிமுகவின் அவைத்தலைவராக பொறுப்புக்கு வந்தார். தனது அரசியல் பயணம் முழுக்க மாவட்ட செயலாளர் முதல் அவைத் தலைவர் வரை அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் மதுசூதனன் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு கட்சியின் அவைத்தலைவர் பொறுப்புக்கு மதுசூதனன் மீண்டும் வந்தார்.






JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 1 week ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 1 week ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 17 hours ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.