முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி!
அக்டோபர் 15, 2021 | 06:11 am | views : 1907
ஐபிஎல் போட்டிகளில் வழக்கமான நன்றாக விளையாடி நிறைய ரன்கள் எடுக்கும் தோனி, கடந்த இரு வருடங்களாக குறைவாக ரன்கள் எடுத்து வருகிறார்.சிக்ஸர்கள் அடிப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.
கீழ்நடுவரிசை வீரராகக் களமிறங்கும் தோனி மற்ற வீரர்களைப் போல ஒரு பருவத்தில் 500, 600 ரன்கள் எடுக்காவிட்டாலும் தேவையான நேரத்தில் ரன்களைக் குவித்து சென்னை வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பார். அதுவும் கடைசி ஓவர்களில் பெரும்பாலும் தோனியை நம்பி இருக்கவேண்டிய நிலைமை இருக்கும்.
தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி விளையாடிய முதல் இரண்டு வருடங்களில் (2018, 2019) 455, 416 ரன்கள் எடுத்தார் தோனி. 2018-ல் சிஎஸ்கே கோப்பையை வென்றது. 2019-ல் 2-ம் இடம் பெற்றது. ஆனால் கடந்த வருடம் மொத்தமாக 200 ரன்கள் தான் எடுத்தார் தோனி. அதுவரை ஐபிஎல் போட்டியில் ஒரு பருவத்தில் தோனி எடுத்த குறைந்தபட்ச ரன்கள் இதுதான். சிஎஸ்கேவும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை.
Also read... கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டியில் தோனி எடுத்த ரன்கள்
414 - 2008
332 - 2009
287 - 2010
392 - 2011
358 - 2012
461 - 2013
371 - 2014
372 - 2015
284 - 2016
290 - 2017
455 - 2018
416 - 2019
200 - 2020
114* - 2021
இந்த வருடம் இன்னும் மோசம். இதுவரை மொத்தமாக 114 ரன்கள் தான் எடுத்துள்ளார் தோனி. வேறு எந்த ஐபிஎல் போட்டியிலும் அவர் இவ்வளவு குறைவாக ரன்கள் எடுத்ததில்லை. பிளேஆஃப்பில் தில்லிக்கு எதிராகக் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக விளையாடி வெற்றியை அளித்தாலும் இந்த வருடம் தோனியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை என்பதே உண்மை. சிக்ஸர்களுக்குப் பெயர் போன தோனி, கடந்த வருடம் மிகக்குறைவாக 7 சிக்ஸர்கள் தான் அடித்திருந்தார். இந்தமுறை 3 சிக்ஸர்கள் மட்டும்தான்!
இறுதிச்சுற்றில் நிலைமை மாறுமா?
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்
ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்
கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை
வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய
கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,
குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்