டி20 கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா மோதும் ஆட்டங்கள்!

டி20 கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா மோதும் ஆட்டங்கள்!

  அக்டோபர் 16, 2021 | 03:57 pm  |   views : 1899


எந்தவொரு விளையாட்டிலும் உலக கோப்பை என வந்தால், அது விளையாட்டு ஆர்வலர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.



அதவும் கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலக கோப்பை என்றால் அதன் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாகவே மாறி விடும்.



ஷார்ட் ஃபார்மெட் கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. கடைசியாக 2016இல் டி20 ஐசிசி உலக கோப்பை நடந்த பிறகு 2018இல் உலக கோப்பை டி20 நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அணிகளின் பரஸ்பர திட்டங்கள் காரணமாக அது நடக்கவில்லை. இதற்கிடையே, 2017இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை நடத்தியது. அடுத்ததாக 2020இல் டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விளையாட்டு தாமதமானது. கடைசியில் ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.



போட்டியை இந்தியா நடத்துகிறது என்றாலும், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது



Also read...  பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?


இந்த உலக கோப்பை நீண்டதாக இருக்கப் போகிறது. அதாவது மொத்த ஆட்டத்தின் காலம் 29 நாட்களுக்கு இருக்கும். இதில் 16 அணிகள் 45 ஆட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலாவது ஆட்டம் அக்டோபர் 17ஆம் நடக்கும். இதையடுத்து இறுதிப்போப்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.




முதலாவது குழுவில் அயர்லாந்து, நமிபீயா, நெதர்லாந்து மற்றும் இலங்கை பரஸ்பரம் மோதிக்கொள்ளும். அதில் ஜெயிக்கும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.



இதேபோல, இரண்டாவது குழுவில் வங்கதேசம், ஓமான், பப்புவா நியூ கினி, ஸ்காட்லாந்து ஆகியவை பரஸ்பரம் மோதி அதில் இருந்து இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.



இதன் பிறகு சூப்பர் 12 சுர்று இருக்கும். அதில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணி ஏ1 மற்றும் பி2 என இருக்கும்.



இரண்டாவது குரூப்பில் இந்தியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவை பி1 மற்றும் ஏ2 என இருக்கும்.



இந்த ஏ1, பி2 மற்றும் பி1, ஏ2 இடங்களில் முன்பு இரு குழுக்களில் இருந்து தகுதி பெறும் நான்கு அணிகள் இடம்பெறும்.



இந்த அணிகள் ஒவ்வொரு குழுவுடனும் மோதும். இதில் முதல் இரண்டு அணிகள் நாக்-அவுட் கட்டத்துக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டத்தைத் தொடர்ந்து இறுதி ஆட்டம் நடக்கும்.



சூப்பர் 12 கட்டம் அக்டோபர் 23இல் தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை நடக்கும். நாக் அவுட் சுற்று நவம்பர் 8இல் தொடங்கி நவம்பர் 10இல் நிறைவடையும். நவம்பர் 14இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.




ஐசிசி டி20 தர வரிசையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. விராட் கோஹ்லி, கேஎல். ராகுல் ஆகியோர் ஐசிசியின் முதல் 10 பேட்டிங் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். ஐசிசி டி20 பெளலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை.



ஐசிசி உலக கோப்பையைப் பொருத்தவரை, 33 ஆட்டங்களில் 20இல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.



இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இந்த உலக கோப்பை ஆட்டத்துக்கு பிறகு 20 ஓவர் ஃபார்மெட்டில் தமது கேப்டன் பொறுப்பை துறப்பதாக கூறியிருக்கிறார். இவரது தலைமையில் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.



ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பதவியை எட்டு ஆண்டுகளாக வகித்தார் கோஹ்லி. ஆனால், ஒருமுறை கூட அவரது தலைமை கோப்பையை வெல்லவில்லை. இதனால், கேப்டன் ஆக மட்டுமின்றி ரன் எடுக்கவே திணறும் நபாக கோஹ்லி ஆடுகளத்தில் பார்க்கப்படுகிறார். எனவே எதிர்வரும் போட்டி கோஹ்லிக்கு சவாலானதாக இருக்கும்.




இந்திய அணியின் வழிகாட்டியாக இம்முறை மகேந்திர சிங் தோனி இருப்பார். டி20 உலக கோப்பை துவக்க ஆட்டத்தின்போது இந்திய அணிக்கு கேப்டன் ஆக இருந்தார் தோனி. அவரது தலைமையில் இந்தியா 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது.



மேலும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. அவர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அனுபவம், இந்திய அணிக்கு டி20 பங்கேற்பில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.



இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் அவரது உதவிக்குழுவினருக்கும் இதுவே கடைசி போட்டி. எனவே, இந்த போட்டியின் முடிவில் வெற்றியை பெற்றுக் கொண்டு ரவி சாஸ்திருக்கு பிரியாவிடை கொடுக்கலாம் என்று இந்திய அணி நம்புகிறது.




களத்தில் விராட் கோஹ்லி ஒருபுறமும் ரோஹித் சர்மா அவருக்கு உதவியாக மறுபுறத்திலும் இருப்பார். இவருடன் சேர்த்து கேஎல்.ராகுல், இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் பொறுப்பை ஏற்பார்கள். ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார். இவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் திறன் இந்திய அணிக்கு திருப்பமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய அணிக்காக வீரர்களை தேர்வு செய்யும்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை அறிவித்தனர். 34 வயதாகும் அவருக்கு ஆஃப் ஸ்பின்னஸ் அனுபவம் உள்ளது. 2017இல் இந்தியா டி20 போட்டியில் ஆடியபோதும் இவர் அதில் பங்கேற்றார். அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகியோர் ப்ளேயிங் 11-ல் இடம் பிடிக்க விரும்புகிறார்கள்.



இவர்கள் தவிர, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய ஆல்ரவுண்டர்களும் களத்தில் இருபுறமும் இருப்பார்கல். ஹர்திக்குக்கு முன்பு முதுகு வலி இருந்ததால் ஐபிஎல் போட்டியில் அவருக்கு பெளலிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர், மாஹம்மத் ஷாமி ஆகியோரும் அணியில் உள்ளனர்.



அக்ஷர் படேலுக்கு பதிலாக வேறு வீரரை களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்திருக்கிறது. ஹத்ரிக் பாண்டியாவுக்கு காயம் காரணமாக பெளலிங் வாய்ப்பு கிடைக்காது. அதனால், ஆல் ரவுண்டர் ஆன ஷர்துல் களமிறங்குவார். வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹர் களம் காணும் ஆர்வத்துடன் உள்ளனர். உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், லுக்மேன் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷபாஸ் அஹ்மத், கே. கெளதம் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய அணி உலக கோப்பையை ஆடும்வரை நெட் பெளலர்களாக இருப்பார்கள்.



ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடி 32 விக்கெட்களை சாய்த்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் அவர் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தாக டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர் அவேஷ் கான் 23 விக்கெட்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக்கும் இந்திய அணிக்கு நெட் பவுலராக சேரவுள்ளார். தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர்கள் இந்திய அணிக்குப் பெரிய அளவில் உதவுவார்கள்.




போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். அடுத்த நிலையில் இருக்கும் அணிக்கு அந்த தொகையில் பாதி அளவு பரிசாக கிடைக்கும். அரையிறுதிவரை தகுதி பெறும் அணிகளுக்கு தலா 4,00,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். சூப்பர் 12 கட்டம்வரை வெல்லும் அணிக்கு போனஸ் தொகை பரிசாக வழங்கப்படும்.




டி20 உலக கோப்பையில் ஒவ்வொரு ஆட்டத்தின் இடையே கூடுதலாக இரண்டு முறை இடைவெளி கிடைக்கும். அது 2 நிமிடங்கள் 30 நொடிகளுக்கு இருக்கும். இது குறிப்பாக இன்னிங்ஸின் மத்திய பகுதியில் வழங்கப்படும்.



முதல் முறையாக டி ஆர் எஸ் டி20 உலகக் கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும், ஒரு இன்னிங்ஸில், இரு டி ஆர் எஸ் வாய்ப்புகள் வழங்கப்படும்.



இந்த ஆட்டத்தில் டிஆர்எஸ் எனப்படும் முடிவு மறுஆய்வு முறை அறிமுகப்படுத்தப்படும். இதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் இரு மறுஆய்வு முறையை ஒவ்வொரு அணியும் பயன்படுத்தலாம்.




ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் நான்கு இடங்களில் போட்டி நடக்கும். அவை மஸ்கட், துபாய், அபு தாபி, ஷார்ஜா இதில் மஸ்கட் நீங்கலாக பிற இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. அங்குள்ள ஆடுகளம் மந்தமாகவும் வறண்டும் காணப்படும்.



இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும். பகல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.




இதற்கு முன்பு வெற்றி பெற்ற அணிகள்



2007-இந்தியா



2009-பாகிஸ்தான்



2010-இங்கிலாந்து



2012-மேற்கு இந்திய தீவுகள்



2014-இலங்கை



2016-மேற்கு இந்திய தீவுகள்





ஆட்ட நாயகன்



2007-ஷாஹித் அஃப்ரிதி



2009- திலக்ரத்னே தில்ஷான்



2010-கெவின் பீட்டர்சன்



2012- ஷேன் வாட்சன்



2014-விராட் கோஹ்லி



2016-விராட் கோஹ்லி






எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 15 hours ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 20 hours ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 1 day ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 2 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 2 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 2 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 2 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 2 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்