பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!

பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!

  நவம்பர் 10, 2022 | 04:38 am  |   views : 1962


பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!



ஆண்களுக்கு மீசை தான் அழகு என்பது தமிழர்களின் கலாச்சாரம் !



தமிழர்களின் வீரத்தை பிரதிபலிப்பதும் இந்த அழகான மீசை தான் !



நட்பை உயிரினும் மேலாக எண்ணி வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரையின் உயிரைக் காப்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து வாளேந்தி போராடி தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணத்தை ஏற்றுக் கொண்ட அந்த மருது சகோதரர்களின் அடையாளமே அந்த அழகான மீசை தான்.



Also read...  ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!


தனி மன்னனாக போர்க்களத்தில் களம் கண்டு வெள்ளையர்களை அடித்துத் துரத்திய அந்த புலித் தேவனுக்கும் பெருமை சேர்த்தது அந்த முறுக்கு மீசை தான்.



இப்படி தமிழர்களின் வீரத்தின் அடையாளமே அற்புதமான அந்த மீசை தான் இன்னும் சொல்லப் போனால் தமிழர்களின் அழகை மெருகூட்டிக் காட்டுவதே அந்த இளமை ததும்பும் இனிய மீசை தான்.



வாலிப பருவத்திலே பசும்பொன் தேவருக்கும் இப்படியொரு அழகான மீசையும் இளமையை பிரதிபலிக்கும் செழுமையான முடியழகும் இருந்தது உண்மை தான்.



இப்படி அரும்பு மீசையும் அழகான கிராப்புடன் காணப்பட்ட பசும்பொன் தேவர் மகன் ஒரு நாள் திடீரென மீசைக்கு விடை கொடுத்துவிட்டார்.



அழகான முடியுடன் கிராப்பு வைத்திருந்த தனது முடி அழகை மாற்றி பாகவதர் சிகை அலங்காரத்திற்கு தன்னை திடீரென மாற்றிக் கொண்டார்.



ஏன் இந்த மாற்றம் ? பலருக்கும் இதற்கான விடை தெரியவில்லை பசும்பொன் திருமகனாரும் இது பற்றி வாய் திறந்து எதுவும் பேசவில்லை வாய் மூடி மௌனமாகவே இருந்தார்.



சில ஆண்டுகள் கழித்து பசும்பொன் திருமகனார்க்கு நெருங்கிய ஒருவர் தைரியத்தை வர வழைத்து அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.



உங்கள் அழகுக்கு அழகு சேர்த்ததே! உங்களது அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான்.



அப்படியிருக்கும்போது ஏன் அந்த அழகான மீசையை எடுத்து விட்டு கிராப்பு முடியை பாகவதர் முடியாக மாற்றினீர்கள்?


என்று கேட்டார். அப்போது தான் திருமகனார் தனது மௌனத்தைக் கலைத்தார்.



ஒரு முறை தேவர் திருமகனார் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு தனது நெருங்கிய நண்பர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வீட்டில் தங்கினார். அப்போது அழகான மீசையும் சுருட்டுத் தலை முடியும் அவரிடம் இருந்தது. இரவு 10 மணியளவில் அவர் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த போது அங்கே ஓர் அழகான கேரளா இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். திருமகனார் தங்கியிருந்த அந்த வீட்டைச் சேர்ந்தவள் அந்தப் பெண்.



அந்தப் பெண் திருமகனாரைப் பார்த்துச் சொன்னாள்! நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவளது ஆசையை தெரிவித்தார்.


அப்போது தேவர் திருமகனார் சொன்னார் அம்மா! நான் ஒரு ஆன்மீகவாதி!



எனக்கு திருமண வாழ்க்கை என்பது கிடையாது ! எல்லாப் பெண்களையும் நான் பராசக்தி வடிவமாக பார்ப்பவன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் ! என்று அவளுக்கு அறிவுரை கூறி அவளை அனுப்பி வைத்தார்.. மனம் மாறிய அந்தப் பெண் புறப்பட்டுச் செல்லும் போது அவளை மீண்டும் அழைத்து திருமகனார் ஒரு கேள்வி கேட்டார்.



அம்மா ! என்னை நீ ஏன் விரும்பினாய்? என்னிடம் உன்னை கவர்ந்த அம்சம் என்ன? என்று கேட்டார்.


அதற்கு அந்தப் பெண் உங்கள் அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான் 'என்னைக் கவர்ந்தது' என்றாள் அந்தப் பெண்.



உடனே மறுநாளே தனது மீசையை எடுத்து விட்டு வாலிப முடி ஸ்டைலை மாற்றி வயோதிக பாகவதர் ஸ்டைலுக்கு தனது முடியை மாற்றியமைத்தார்.



அதற்கு திருமகனார் விளக்கம் கூறும்போது உண்மையான பிரம்மச்சாரியம் என்பது நாம் ஒரு பெண்ணை பார்க்காமல் இருப்பது மட்டுமல்ல! வேறு எந்தப் பெண்ணும் தன்னைப் பார்க்காமல் இருக்குமளவிற்கு தன் அழகைக் குறைத்துக் கொள்பவன் தான் உண்மையான பிரமச்சாரி. அதனால் தான் நமது முனிவர்களெல்லாம் நீண்ட தாடி வளர்த்து எந்தப் பெண்ணும் தன் மீது விருப்பப் படக்கூடாது என்பதற்காக தான் அழகாக தோற்றமளிக்காமல் காட்சியளித்தனர். இது தான் பசும்பொன் திருமகனார் தன் மீசையை துறந்ததற்கான காரணம் பற்றி கொடுத்த விளக்கம்.



தவத்திலே மிகவும் வலிமையான விசுவாமித்ரரே மேனகை என்ற நடன அழகி தன் எதிரே வந்தவுடன் அவள் அழகில் மயங்கி தனது தவத்தை கலைத்து விட்டுச் சென்றதாக இதிகாசம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது அழகான பெண் தன்னைத் தேடி வந்தும் அவளுக்கு அறிவுரை கூறி அவளை திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவள் விரும்பிய தனது அழகையே மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு அபூர்வ மனிதர் திருமகனார் அவர்கள்.



ஆனால் தனது கொள்கையை தேவர் திருமகனார் மற்றவர்களிடம் திணித்ததில்லை. மறைந்த மதிப்பிற்குரிய மூக்கையா தேவரின் நெருங்கிய நண்பர் எனது தந்தையார். என்னை அடிக்கடி அவரிடம் என் தந்தையார் பல முறை அழைத்துச் சென்றிருக்கிறார். திருமகனார்க்கு மிகவும் நெருக்கமானவர் திரு.மூக்கையா தேவர் அவர்கள் அப்போது அவர் சொன்ன விஷயம்.


"மற்றவர்கள் மீசை வைத்ததை திருமகனார் எப்போதும் எதிர்த்ததில்லை அதனால் தான் நானே மீசை வைத்திருக்கிறேன்!" என்பார்.


அதனால் நீங்கள் அனைவரும் அழகான மீசை வைத்துக் கொள்ளுங்கள்.



அதில் எந்தத் தவறும் இல்லை காரணம் பெரிய மீசை தான் தமிழனின் கலாச்சாரம் ! தமிழர்கள் வீரத்தின் அடையாளம். தேவர் திருமகனாரும் அதை எதிர்த்ததில்லை. அவர் மீசையை துறந்ததற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.



நன்றி !



இது போன்று நேதாஜி பசும்பொன் தேவர் திருமகனார் பற்றிய பல கட்டுரைகளும் சமுதாய விழிப்புணர்வை உருவாக்கும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவரும்.



எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 1 day ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 1 day ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 2 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 3 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 3 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 3 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 3 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 3 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்