பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி புறக்கணித்தால் இரட்டை இலை முடக்கப்படும்!

பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி புறக்கணித்தால் இரட்டை இலை முடக்கப்படும்!

  டிசம்பர் 22, 2022 | 04:04 pm  |   views : 1928


உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான். மக்களே தங்களுக்கு விருப்பமான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். வாக்கு அரசியல் முறை பெரும்பான்மை நாடுகளில் இருந்தாலும், தேர்தல் முறையும், தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். தேர்தல் முறை வேறுவேறாக இருந்தாலும், எல்லா நாட்டுக்கும் பொதுவாக இருப்பது என்னவென்றால், அது தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சியின் ‘கட்சி சின்னம்’ ஆகும்.





உலகமே உற்று நோக்கும் ஒரு தேர்தல் என்றால், அது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்தான். அந்த தேர்தலில் யார் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டாலும் குடியரசுக் கட்சியின் சின்னம் ‘யானை’, ஜனநாயக் கட்சியின் சின்னம் ‘கழுதை’. அதுதான் தேர்தலில் பிரதானப்படுத்தப்படும். அவ்வாறு இருக்கும்போது, இந்தியா மாதிரியான கல்வியறிவில் வளர்ந்துவரும் நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் சின்னம்தான், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும். இந்திய அளவில் எல்லாருக்கும் தெரிந்த சின்னம் என்றால், ஒன்று காங்கிரஸின் கை சின்னம், பா.ஜ.க-வின் தாமரை சின்னம். அதேபோல், தமிழ்நாட்டில் மூளைமுடுக்கு வரை எல்லாருக்கும் தெரிந்த சின்னம் என்றால், உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள்தான். தமிழ்நாட்டில், எந்த இடத்திலும், எந்த வகையான தேர்தலிலும் இந்த இரண்டு சின்னத்தில் நிற்கும் வேட்பாளர்கள்தான் முதல் இரண்டு இடத்தை பிடிப்பார்கள். தமிழ்நாட்டின் வின்னர், ரன்னர் என்றால் அது உதயசூரியனும், இரட்டை இலையும் தான். வேறு எத்தனை சின்னம் இருந்தாலும் அவர்கள் பங்கேற்பாளர்கள்தான். அதுதான் சின்னத்திற்கான மவூசு.





Also read...  கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?






அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.கவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னம்தான் உதயசூரியன். அந்த உதயசூரியன் இதுவரை மங்காத சூரியனாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், இரட்டை இலையின் வரலாறு அப்படி இல்லை. இது இரண்டு முறை உதிர்ந்து உதிர்ந்துதான் தளர்ந்து உள்ளது. ஆனால், இப்போதும் ரேஸில் முதல் இரண்டு இடங்களில்தான் உள்ளது. அதுமட்டுமின்றி, எம்.ஜி.ஆர் வேட்பாளரையே தோற்கடித்த வரலாறு இரட்டை இலைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரட்டை இலை மீண்டும் கடினமான கால கட்டத்தில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.





எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் அ.தி.மு.க ஒற்றைத் தலைமையாக உருவாக எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். முதலமைச்சர் வேட்பாளர் பதவியையும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் வாங்கியது போல எளிதாக அ.தி.மு.க தலைமைப் பதவியை பிடித்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நினைத்தது நடக்கவில்லை. இந்த விவகாரத்தில், அதுவரை இல்லாத அளவிற்கு ஓ.பி.எஸ் கடும் எதிர்ப்பைக் காட்டினார். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் ஓ.பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் மூலமாக முட்டுக்கட்டை போட்டார் ஓ.பி.எஸ்.





எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் உண்டாகி சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அவங்களுக்கு இடையே பிரச்சனை குறையவில்லை. அ.தி.மு.க-வின் தலைவர் யார், யார் பொருளாளர், யாருக்கு பொதுக்குழுவை கூட்ட உரிமை உள்ளது? இந்தக் கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது. யாரேனும் பதில் சொன்னாலும் அதுதான் சரி என்று ஒப்புக்கொள்ளவும் முடியாது. ‘எல்லாத்தையும் மேல இருக்கவன் பாத்துக்குவான்’ என்பது போல அந்த மேலே இருக்கவன் என்பது மத்திய பா.ஜ.க அரசு என்பதை புரிந்துக்கொள்ளலாம், அல்லது தேர்தல் ஆணையம் என்றும் புரிந்துக்கொள்ளலாம், இல்லை உச்சநீதிமன்றம் எனவும் புரிந்துக்கொள்ளலாம். அல்லது மூன்றும் என்றும் புரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால், அ.தி.மு.க-வின் விவகாரம் மூன்று இடத்திலும் நிலுவையில் உள்ளது.









ஒரு கட்சியின் விதிகள், நிர்வாகிகளின் ஆதரவுதான் கட்சி யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய முக்கிய காரணமாக அமையும். ஆனால், கட்சியின் அதிகபட்ச அதிகாரம் கொண்ட தலைவர்களுக்கு இடையே போட்டி வரும்போது கட்சி முடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கலாம். கட்சி முடங்குவது என்பது சின்னம் முடங்குவதுதான். யாரும் கட்சிப் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சி முடங்கியிருந்தால் புது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டியிருக்கும்.





அந்த சிக்கலையும் அ.தி.மு.கவும், இரட்டை இலையும் ஏற்கெனவே எதிர்கொண்டிருக்கிறது. 1989-ல் ஜெயலலிதா, ஜானகி பிரச்சனையால் இரட்டை இலை முடங்கியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவால் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இரண்டாவது முறை 2017-ல் இரட்டை இலை முடங்கியது. ஆனால் அப்போது பெரிய தேர்தல்கள் வருவதற்கு முன்பே இரட்டை இலை சின்னமும், கட்சியும் மீட்கப்பட்டது. இப்போது, அப்படி ஒரு சூழல்தான் நிலவுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.





2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள்கூட இல்லை. தமிழ்நாட்டில் ஒரு வலுவான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது பா.ஜ.க-வின் எண்ணமாக உள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க சூழல் இல்லாததால், அ.தி.மு.கதான் பா.ஜ.க-வின் தேர்வாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக இருக்கும் அ.தி.மு.கவால், மிக வலிமையாக இருக்கும் தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாது என பா.ஜ.க. கருதுகிறது. எனவே, ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய அனைவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. அல்லது குறைந்தபட்சம் முன்புபோல ஓ.பி.எஸ்-சை கட்சியில் சேர்க்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வின் முடிவுக்கு உடன்படவில்லை. தான் ஒற்றைத் தலைமையாகதான் இருப்பேன் என்பதில் உறுதியாக உள்ளார். மாறாக, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க இல்லாமல் போட்டியிடலாம் என்பதுதான் அவரின் விருப்பமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அதற்கு உதாரணம்தான், தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி வைக்கும் என சி.வி.சண்முகம் பேசியது. இது பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்பதைதான் காட்டுகிறது என அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.





மேலும், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ் திடீரென அவர் தரப்பு நிர்வாகிளுடன் சந்திப்பை நடத்துகிறார். ‘கூட்டணியை முடிவு செய்வேன், எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்க வேண்டும், கட்சியை கபலிகரம் செய்ய முடியாது, இரட்டை இலை சின்னம் முடங்காது, மாறாக எனக்குதான் சின்னம் கிடைக்கும்’ என பேசியிருந்தார். ஓ.பி.எஸ் சின்ன சின்ன முடிவையும் பா.ஜ.கவுடன் ஆலோசனை செய்துவிட்டுதான் செயல்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, திடீரென இவ்வளவு பெரிய சந்திப்பு ஏற்பாடு செய்ததற்கும் பா.ஜ.க தரப்பு ஆலோசனை இருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது. இது மூலமாக, எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பா.ஜ.க சமிஞ்சை கொடுக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.





எடப்பாடி பழனிசாமி இதற்கு இணங்காத பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கான பணியையும் பா.ஜ.க செய்யலாம் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலாவையோ, டி.டி.வி.தினகரனையோ, ஓ.பன்னீர் செல்வத்தையோ ஒதுக்கிவைக்கும் தைரியம் இருக்கலாம். அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்லலாம். பா.ஜ.க இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடிவு எடுக்க தைரியம் இருக்கலாம். ஆனால், இரட்டை இலை இல்லாமலோ, அ.தி.மு.க கட்சி அடையாளம் இல்லாமலோ தேர்தலை எதிர்கொள்ள நிச்சயம் தைரியம் வராது என்பது பொதுவான பார்வை.





எனவே, பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தால் இரட்டை இலையை முடக்க பா.ஜ.க தயங்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் இடைப்பட்ட காலத்தில் தன் விருப்பப்படி அதிமுகவை வளைத்து கொள்ள முடியும் என்பதுதான் பா.ஜ.க-வின் கணிப்பு என முனுமுனுக்கப்படுகிறது.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 59 minutes ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 23 hours ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 1 day ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 1 day ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 1 day ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 1 day ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 2 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 2 days ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய