இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!
டிசம்பர் 26, 2022 | 08:58 am | views : 2357
சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி விடுகின்றனர்.
அவர்கள் வளர்ந்து பெரியவர்களானாலும் கூட இரவு ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு தான் தூங்க செல்வார்கள். ஒருநாள் இரவு பால் குடிக்கவில்லை என்றாலும் கூட எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள். இந்த பட்டியலில் நீங்களும் ஒருவரா.? உங்களின் தினசரி இந்த இரவு பழக்கம் உங்கள் உடல் நலம் குறைய மற்றும் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா...?
உண்மையில் இரவில் தூங்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுவதாக பல ஆண்டுகளாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நிபுணர்கள் பலர் இந்த தினசரி இரவு பழக்கம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் எடை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம் என கூறுகிறார்கள். இரவில் கட்டாயம் பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கத்தை நீங்கள் ஏன் மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே...
மலச்சிக்கல்: தினசரி இரவு நேரத்தில் கோல்ட் மில்க் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்திற்குள் பலர் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சாப்பிட்ட இரவு உணவே சரியாக செரிமானம் ஆகியிருக்காத நிலையில், தூங்குவதற்கு முன் பால் குடிப்பது செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
Also read... நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
எடை அதிகரிப்பு: இரவில் பால் குடிப்பதன் காரணமாக புரோட்டின் மற்றும் பால் கொழுப்புகளை வளர்சிதைமாற்றம் செய்து ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் ஆட்டோமேட்டிக்காக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. தோராயமாக 1 கிளாஸ் பாலில் சுமார் 120 கலோரிகள் உள்ளன. ஆனால் இரவில் கலோரிகள் எளிதில் எரிக்கப்படுவதில்லை, இதனால் உடல் எடை கூடும் வாய்ப்புகள் அதிகம்.
செரிமான பாதிப்பு: இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் சில நேரங்களில் நபருக்கு நபர் மாறுபடலாம். குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத ஒருவர் இரவில் பால் குடித்தால், அவரது செரிமானத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இரவு நேரத்தில் நமது உடல் ஓய்வில் இருக்கும் போது பாலில் உள்ள புரோட்டினை வளர்சிதைமாற்றம் செய்வது உடலுக்கு கடினமாக இருக்கும். இதனால் அசௌகரியம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
வளர்சிதைமாற்றம் மெதுவாகும்: இரவில் பால் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதோடு கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இது உட்லைன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மெதுவாக்குவதோடு கொழுப்பு படிவு (fat deposition) மற்றும் எடை அதிகரிக்க காரணமாகிறது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'
பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,