சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

சிவி சண்முகம் மூலம் ஓபிஸ் மகனுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி!

  ஜூலை 07, 2021 | 08:03 am  |   views : 1811


மத்திய அமைச்சரவையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவே முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்துகள் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.




கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இதில் அதிமுகவை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.



இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் கருதினார். ஆனால் மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது அது போல் இடம் கிடைக்கவில்லை.




Also read...  கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?



இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நிச்சயம் தனது மகனுக்கு அமைச்சர் பதவியை பெறுவது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்தார். இதற்காக நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.






இந்த நிலையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெற பாஜக கூட்டணி கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன. அதில் ஒருவர் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ். இவர் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்.



ஆனால் பாஜகவின் சாய்ஸ் எல் முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோராக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.



மேலும் பாஜகவால் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தோற்றதற்கு அதிமுகதான் காரணம் என குற்றம்சாட்டி வருகிறார்கள். தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் கழித்து திடீரென ஏன் இப்படி ஒரு கருத்து என நீங்கள் நினைக்கலாம்.




விஷயம் இல்லாமல் இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் ஒன்றுபட்டு இருந்தாலும் அணிகளாகவே உள்ளனர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே செயல்பட்டு வருகிறார்கள். சிவி சண்முகம் பேசியது எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை பேரில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.



நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை மட்டும் ஜெயிக்க வைத்துவிட்டார் என்றும் சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட அதிமுகவினர் வெற்றிக்கு ஓபிஎஸ் உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்ததாக சொல்லப்பட்டது.



இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்வு முதல் இருவரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பிளான் செய்து சிவி சண்முகத்தை பாஜகவுக்கு எதிராக பேச வைத்துள்ளாரா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கு எழுந்துள்ளது.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 19 hours ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 1 day ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 1 day ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 1 day ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 1 day ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 2 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்


பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?

2024-05-14 17:02:39 - 2 days ago

பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..? தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய


கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2024-05-14 15:19:11 - 2 days ago

கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.