யார் இந்த அத்திக் அகமது? அத்திக் அகமது வரலாறு என்ன?

யார் இந்த அத்திக் அகமது? அத்திக் அகமது வரலாறு என்ன?

  ஏப்ரல் 17, 2023 | 02:42 am  |   views : 2046


லக்னோ: கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ்) அத்தீக் அகமது பிறந்தார். இவரது தந்தை பெரோஸ் குதிரை வண்டி ஓட்டி குடும்பத்தை நடத்தினார். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த அத்தீக் படிப்பை தொடரவில்லை.



முதலில் சரக்கு ரயில்களில் நிலக்கரியை திருடி விற்றார். அதன் பிறகு ரயில்வே கழிவு பொருட்களை வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அப்போது அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை மிரட்டி அனைத்து ரயில்வே கழிவு பொருட்களையும் அவரே வாங்கினார். தொழில் போட்டி காரணமாக 17-வது வயதில் ஒருவரை கொலை செய்தார். 23-வது வயதில் பிரயாக்ராஜ் பகுதியின் பிரபல ரவுடியானார்.



அப்போது பிரயாக்ராஜ் பகுதியில் சந்த் பாபா என்ற ரவுடி கோலோச்சினார். அவரை எதிர்த்தவர்கள் அத்தீக் அகமதுவுடன் கைகோத்தனர். ஷாகத் என்ற ரவுடியும் பிரயாக்ராஜில் ஆதிக்கம் செலுத்தினார். கடந்த 1989-ல் போலீஸ் கவுன்ட்டரில் ஷாகத் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் அத்தீக் அகமதுவின் அடியாட்கள் ரவுடி சந்த் பாபாவை பட்டப்பகலில் கொலை செய்தனர்.



இதன்பிறகு அரசியலில் கால் பதித்த அத்தீக் அகமது கடந்த 1989-ம் ஆண்டு முதல் அலகாபாத் மேற்கு தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும் கடந்த 2004 முதல் 2009 வரை புல்பூர் மக்களவைத் தொகுதியில் எம்பி ஆகவும் பதவி வகித்தார். சமாஜ்வாதி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தார்.



Also read...  ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!



இவர் மீது 103 வழக்குகள் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்தீக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் அத்தீக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் கடந்த 13-ம் தேதி அத்தீக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநாளில் அவரது 3-வது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.



கடந்த 1995-ல் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றபோது, அன்றைய சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் ஆதரவாளர்கள், மாயாவதி உட்பட பகுஜன் எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்தீக் அகமது தலைமையிலான ரவுடிகள் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.



இதன்பிறகு பகுஜன் எம்எல்ஏ ராஜு பாலையும் அத்தீக்கின் அடியாட்கள் கொலை செய்தனர். இதன் காரணமாக மாயாவதி முதல்வராக இருந்தபோது அத்தீக் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவரது சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடியவில்லை. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அத்தீக் சுதந்திரமாக வலம் வந்தார்.



இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அப்போது முதல் அத்தீக் அகமது மற்றும் அவரது அடியாட்கள் 89 பேர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அவரது ரூ.11,684 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.



அத்தீக் அகமதுவுக்கு 5 மகன்கள். இவர்களில் மூத்த மகன் உமர், 2-வது மகன் அலி ஆகியோர் ஆள்கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 3-வது மகன் ஆசாத் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி 2 மகன்களும் மைனர்கள். அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர். அத்தீக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீண் தலைமறைவாக உள்ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் கொல்லப்பட்ட நாளில் இருந்து 50 நாட்களில் அத்தீக் அகமதுவின் ரவுடி சாம்ராஜ்ஜியத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அழித்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தை ஆட்டிப்படைத்த அத்தீக்கின் உடலை உறவினர்கள் நேற்று பெற்றுக் கொண்டனர்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 1 day ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 1 day ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 2 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 2 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 2 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 3 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 3 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 3 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்