தந்தையின் நண்பர் என்ற போர்வையில் அத்துமீறல்: சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர்

தந்தையின் நண்பர் என்ற போர்வையில் அத்துமீறல்:  சிறுமியை பலாத்காரம் செய்து  வீடியோ எடுத்து மிரட்டிய ஜோதிடர்

  ஜூலை 29, 2023 | 06:50 am  |   views : 508


திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது56). ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார்.



பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களது வீட்டுக்கு சுதர்சனன் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.ஜோதிடரின் நண்பருக்கு 15 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். தந்தையின் நண்பர் என்பதால் ஜோதிடரின் வீட்டுக்கு சிறுவன்-சிறுமி இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள்.



இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவரையும் ஜோதிடர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அவர்களும் வழக்கம் போல் ஜோதிடரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது சிறுவனை இறைச்சி வாங்கி வருமாறு கூறி வீட்டில் இருந்து வெளியே ஜோதிடர் அனுப்பியிருக்கிறார். சிறுவன் சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.அதனை குடித்த சிறுமி சிறுது நேரத்தில் மயங்கி விட்டதாக தெரிகிறது.



இதையடுத்து சிறுமியை தனது வீட்டுக்குள் தூக்கிச்சென்ற ஜோதிடர் சுதர்சனன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றிருந்த சிறுவன் திரும்பிவந்ததும், அறையில் இருந்த சிறுமியை மயக்கம் தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோதிடர் சுதர்சனன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அதனை காண்பித்து சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜோதிடர் மிரட்டியதால், அதுபற்றி தனது பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் சிறுமி தெரிவிக்காமல் இருந்துள்ளார்.ஆனால் ஜோதிடரின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்துள்ளது.



Also read...  பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

இதனால் உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனது நிலை குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அதனை அவர்கள், சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஜோதிடர் சுதர்சனனிடம் சென்று கேட்டுள்ளனர்.அப்போது தன்னிடம் உள்ள சிறுமியின் படுக்கையறை படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சைல்டுலைன் அமைப்பு மற்றும் வைக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஜோதிடர் சதர்சனனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.தந்தையின் நண்பர் என்பதை பயன்படுத்தி சிறுமியிடம் ஜோதிடர் சுதர்சனன் அத்துமீறியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 1 day ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 2 days ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 2 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 3 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 3 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 3 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 3 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 4 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்