தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்!

தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்!

  மார்ச் 11, 2024 | 11:53 am  |   views : 154


பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டிருந்தார்.



இதனால் அந்த ஒரு இடத்தை தி.மு.க. எடுத்துக்கொண்டு 21 தொகுதிகளில் இந்த தேர்தலில் களம் காண்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் கிடைத்து விடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு உள்ளனர்.



இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் கிடைத்து விட்டது.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சில தொகுதிகளை தி.மு.க. மாற்ற உள்ளது. இதில் புதுச்சேரி தொகுதியை வழக்கம் போல் காங்கிரசுக்கு தி.மு.க. கொடுத்து விடுகிறது.தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்டு வருகிறது.ஆனால் இந்த முறை காங்கிரஸ் வசம் உள்ள சில தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக புது தொகுதிகள் சிலவற்றை காங்கிரசுக்கு கொடுக்க உள்ளது.



ஏனென்றால் காங்கிரஸ் வசம் உள்ள கரூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் போட்டியிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். திருவள்ளூர் தொகுதியையும் சிவகங்கை தொகுதியையும் இம்முறை தி.மு.க. எடுத்துக்கொள்ளும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.காங்கிரஸ் வசம் உள்ள ஆரணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியையும் தி.மு.க. எடுத்துக்கொண்டு வேறு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கும் என்றும் தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இன்று தி.மு.க. ஆலோசிக்க உள்ளது.தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் சில தொகுதிகளின் வேட்பாளர் யார் என்று இப்போதே தெரிந்து விட்டது.



Also read...  பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்


தூத்துக்குடியில் கனிமொழி, நீலகிரியில் ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 7 தொகுதிகளின் வேட்பாளர் யார்? என்று இப்போதே தெரிந்துவிட்டதால் மீதம் உள்ள 14 தொகுதிகளை தி.மு.க. அடையாளம் காண உள்ளது. அது சம்பந்தமாக இன்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பேசி முடிவு செய்யப்படும் அதைத் தொடர்ந்து ம.தி.மு.க.வுக்கும் தொகுதி இறுதி செய்யப்படும்.எனவே எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை தி.மு.க. நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 2 days ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 2 days ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 3 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 4 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 4 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 4 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 4 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 4 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்