காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய தேவர்!

காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வழங்கிய தேவர்!

  ஜூலை 15, 2021 | 09:01 am  |   views : 1852


"பசும்பொன் தேவர் இல்லையென்றால் காமராஜர் என்ற நபர் பெயர் தமிழ்நாட்டில் இல்லை"



விருதுநகர் வட்டாரத்திலும் ஐஸ்டிஸ் கட்சியினர் அட்டகாசம் செய்தனர். காமராஜரைப் பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் ஓரமாக வீதீயில் வேட்டியை உரித்து விட்டு இரண்டு சண்டியர்கள் காலால் வேட்டியை மிதித்துக் கொண்டனர். மீதி இரண்டு சண்டியர்கள் காமராஜ் மீது சாணி உருண்டைகளை எறிந்தனர். அத்துடன் இரவோடு இரவாக பட்டிவீரன் பட்டிக்குக் காமரைஜரைக் கொண்டு சென்று வாழைத் தோப்பில் வைத்து வெட்டிப் புதைக்க சதி செய்தனர்.



தேவர் விருதுநகர் வந்து காமராசரை விசாரித்திட அவரும் ஒப்புக் கொண்டார். அன்று இரவு "காமராஜ் சாதாரண ஏழைத் தொண்டன் என்று இங்குள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜுக்குப் பின்னால் காங்கிரஸ் மகாசபை இருக்கிறது. அந்த மகாசபையில் எங்களைப் போல் எந்த விதத் தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப்பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.



இரவோடு இரவாக காமராஜரைத் தூக்கிக்கொண்டு போய் கொலை செய்யப் போவதாகக் கேள்விப்படுகிறேன். அது உண்மையானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி. ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். காமராஜர் மீது ஒரு துரும்புபடுமானால் நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடக்க முடியும்" என்று முழங்கினார்.



Also read...  அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!


விருதுநகர் ஜில்லா போர்டு தேர்தலில் காமராஜர் சாதாரண காங்கிரஸ் தொண்டராக இருந்து போட்டியிட முன்வந்தார். அடியாட்கள் மூலம் நீதிக்கட்சியினர் காமராஜரைக் கடத்தினர்.



தேவர் இதை அறிந்து விருதுநகர் வந்து பொதுக்கூட்டம் போட்டு மேடையில் "இந்த கூட்டம் முடிந்தபின் நான் மேடையை விட்டு இறங்கு முன்பு காமராஜ் இங்கு வரவேண்டும். இல்லையேல் அவரை அடைத்து வைத்திருப்பவர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும்" என்று எச்சரித்தார்.



ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காமராஜரை விடுதலை செய்தனர். காமராசரும் நன்றி சொன்னார். நகராட்சிக்கு வரி செலுத்தும் வசதி இல்லாத காமராசருக்குத் தேவர் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி காமராசர் பெயரால் வரியைக்கட்டி தேர்தலில் நிறுத்தினார். காமராசர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.



காமராசரை "கிங மேக்கர்" என்பர். தேவரோ "கிங் மேக்கர் ஆப் கிங் மேக்கர்ஸ்" பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜர் பசும்பொன் தேவர் முன் மொழிந்தார்.



நூல்: பசும்பொன் களஞ்சியம்



தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 1 day ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 1 day ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 2 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 3 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 3 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 3 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 3 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 3 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்