நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

 நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Views : 1789

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், நடிகர் சீனிவாசன் கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.. பின்பு, நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் பிரபலமானார்.. அவரின் நடிப்பை பலரும் கலாய்த்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.. இன்னும் சொல்லப் போனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது..


இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக ரத்தம் அழுத்தம் காரணமாக, அவர் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.. இதனையடுத்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அவரின் உடல்நிலையை பரிசோதத்த மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 2 days ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்