வாயை திறந்தாலே ஆபாசம்.. ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்!

வாயை திறந்தாலே ஆபாசம்.. ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்!

Views : 1966

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது.

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது. சூரியா, சிக்காவுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து போடுவார். இவர்களின் லைவ் வீடியோ இன்னும் மோசமாக இருக்கும். மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசுவார்கள். அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை வரும், பின்னர் சில நாட்களில் மீண்டும் ஒன்று சேர்ந்து வீடியோ போடுவார்கள். இவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறைய பெண்கள் புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்;- சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் யூடியூப்பில் பதிவு செய்து வருவதாகவும், இதுசமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்கள் இருவரும் நடத்தி வரும் surya media மற்றும் singer sikka official ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு விபசார வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 day ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்