விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Views : 1878

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் விஜய் கலந்துகொள்கிறார். அதை முடித்துக்கொண்டு படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் 15 நாட்கள் நடத்த உள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் இறுதியாக வில்லை.

அதே போல் சென்னை படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, பட குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர் என கூறப்படுகிறது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர் 7-ம் தேதி எடுக்கும் ப்ரொமோவை படம் தொடங்குவதற்கு முன்பு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.



லோகேஷ் - விஜய் இணையும் புதிய திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

முழு நீள ஆக்சன் படமாக தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கிடையே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.



ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளதால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 day ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்