தோல்வி துரத்திய காலம்.. ரஜினிக்கு கைகொடுத்த சிவாஜி..!

தோல்வி துரத்திய காலம்.. ரஜினிக்கு கைகொடுத்த சிவாஜி..!

Views : 1936

1978 இல் ரஜினி வளர்ந்து வரும் நடிகர். சிவாஜி திரையுலகில் அனைத்து வெற்றிகளையும் ருசித்தவர். இவர்கள் இருவரும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்தனர்.



சங்கர் சலீம் சைமன், பைரவி, முள்ளும் மலரும் போன்ற வெற்றிப் படங்களும், கணிசமான தோல்விப் படங்களும் கொடுத்திருந்த நேரத்தில் சிவாஜியுடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. அதுவும் வளர்ப்பு மகனாக. நன்னு சந்திரா கதைக்கு வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுத, யோகானந்த் படத்தை இயக்கினார். கதையாகப் பார்த்தால் அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதுதான்.







சிவாஜிதான் ஜஸ்டிஸ் கோபிநாத். நேர்மை தவறாதவர். அவர் பொய் சாட்சிகளால் முருகன் என்ற குற்றம் செய்யாத நபருக்கு தண்டனை தரும்படி ஆகிறது. முருகனின் மனைவி அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ள, அவர்களது மகன் ரவியை தனது மகன் போல் வளர்க்க ஆரம்பிக்கிறார் ஜஸ்டிஸ் கோபிநாத். ரவியும் அப்பாவிடம் ஜுடோ கற்று ஸ்டைலும், சண்டையுமாக வளர்கிறான். வழக்கறிஞராகும் ரவிக்கு, சாதி கடந்து உமா என்ற பெண்ணிடம் காதல் ஏற்படுகிறது. இந்த நேரம் சிறையிலிருந்து முருகன் விடுதலையாகிறான். வெளியே வந்தவன் மனைவியின் தற்கொலையைக் குறித்து அறிகிறான். தொலைந்துபோன மகனை தேட ஆரம்பிக்கிறான்.







ஒருகட்டத்தில் ரவிதான் முருகனின் மகன் என்ற உண்மையை ஜஸ்டிஸ் கோபிநாத் சொல்ல வேண்டியதாகிறது. உமாவை ரவிக்கு திருமணம் செய்துத்தர உமாவின் தந்தை மறுக்கிறார். முன்பு முருகனை குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பியது உமாவின் தந்தை என்பது தெரிய வருகிறது. இந்த குழப்பங்களை கடந்து எப்படி உமாவும், ரவியும் சேர்ந்தார்கள் என்பது கதை.










படிப்பதற்கு சுவாரஸியமாக இருக்கும் கதையை திரையில் பார்க்கையில் அத்தனை சுவாரஸியம் இருப்பதில்லை. தங்கப்பதக்கம், கௌரவம் படங்களில் வரும் சிவாஜியைப் போல் ஜஸ்டிஸ் கோபிநாத் கதாபாத்திரத்தில் ஒரு கம்பீரமான சிவாஜியை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதிலும் ஏமாற்றமே. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும், பாடல்களும் இருந்தும் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது.







ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியான ஆறு தினங்களில் ரஜினியின் ப்ரியா படம் வெளியாகி 175 தினங்கள் ஓடி ரஜினியின் முதல் வெள்ளி விழா திரைப்படமானது. சரியாக 42 தினங்களில் சிவாஜியின் 200 வது படம் திரிசூலம் வெளியாகி 175 தினங்களுக்கு மேல் ஓடி, இன்டஸ்ட்ரி ஹிட்டானது. ஜஸ்டிஸ் கோபிநாத்தை இயக்கிய யோகானந்த் இயக்கத்தில் அடுத்த வருடமே சிவாஜி, ரஜினி இணைந்து நடித்தனர். நான் வாழவைப்பேன் என்ற அந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரித்தவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் லாபம் சம்பாதித்து தந்தது.



1978 டிசம்பர் 16 இதே நாளில் வெளியான ஜஸ்டிஸ் கோபிநாத்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 2 days ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 2 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்