பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்
இவை நான்கும்
கலந்து உனக்கு
நான் தருவேன்
கோலம் செய் துங்கக்
கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்
தமிழ் மூன்றும் தா!
முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கு
முதல்வனே!
சிவனின் புதல்வனே!
யானை முகம் கொண்ட
ஆதவனே!
தம்பிக்கு துணை நின்ற
தூயவனே!
இசையின் நாதமே!
உன் தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை!