INDIAN 7

Tamil News & polling

டெல்லி கார் வெடிப்பு: பயங்கரவாதிகளின் சதித்திட்டம் அம்பலம்! 💣 உடனே தெரிஞ்சுக்கோங்க!

By E7 Tamil 24 நவம்பர் 2025 04:52 AM
Nature

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் இதுவரை 4 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் வெடிப்பு சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே தற்கொலை குண்டாக பலியாகி விட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முசாபர் என்பவர் ஆப்கானிஸ்தான் தப்பிச் சென்றிருப்பதாக தெரிகிறது. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான செயல் முறையில் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பு பயங்கரவாதிகள் அந்த தாக்குதலை எப்படி நடத்துவது?, தாக்குதலுக்கு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை எவ்வாறு உருவாக்குவது? என்பதை "யூடியூப்" மூலம் அறிந்துள்ளனர். அல்பலா பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து 3 பேர் கட்டளையிட்டுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரிய வந்துள்ளது.

உகாசா பைசான், ஹாஸ்மி என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். இவர்களிடம் உமர் முகமது, அதில் ராதர் மற்றும் முசாமில் ஷகீல் உள்ளிட்டோர் சிரியா அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் அந்த கட்டளைதாரிகள் 3 பேரும் இந்தியாவில் இருந்தே வேலைகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தங்களுக்குள் செய்திகளை பரிமாற்றம் செய்ய ‘டெலிகிராம்’ மற்றும் ‘மாஸ்டோன்’ செயலியை பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செயற்கை நுண்ணறிவையும் (ஏ.ஐ.)அதிகம் பயன்படுத்தி உள்ளார்கள்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம்.

Image சென்னை, டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து



Whatsaap Channel


பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை! 🚨 உடனே தெரிஞ்சுக்கங்க!

பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை! 🚨 உடனே


தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கடையநல்லூர் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உடல் நசுங்கி பலி!

கடையநல்லூர் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6


தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள்ள மழை தண்ணியா? 🌧️ நோயாளிகள் நிலை என்ன?

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள்ள மழை தண்ணியா? 🌧️ நோயாளிகள் நிலை


மழை எச்சரிக்கை! 13 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு! ☔️ பார்த்து போங்க!

மழை எச்சரிக்கை! 13 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு! ☔️ பார்த்து



Tags

விஜய் Vijay DMK TVK திமுக தவெக அதிமுக கனமழை சென்னை அண்ணாமலை திருமாவளவன் Chennai பாஜக Annamalai MK Stalin தமிழக வெற்றிக் கழகம் ADMK BJP சீமான் தீபாவளி AIADMK Thirumavalavan வடகிழக்கு பருவமழை தவெக மாநாடு எடப்பாடி பழனிசாமி இந்திய அணி Tamil Nadu Northeast Monsoon Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழகம் மு.க.ஸ்டாலின் TVK Conference TTV Dhinakaran PMK AMMK Rain பிரதமர் மோடி மழை தமிழ்நாடு உதயநிதி ஸ்டாலின் Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் காங்கிரஸ் Edappadi Palaniswami IMD தென்காசி VCK பாமக தவெக விஜய் தமிழக அரசு இந்தியா Sengottaiyan அமரன் Ind vs Nz Udhayanidhi Stalin வானிலை பாலியல் தொல்லை மதுரை Tirunelveli கைது விசிக விடுமுறை நடிகை கஸ்தூரி PM Modi GetOut Stalin TVK Vijay திருச்செந்தூர் நயினார் நாகேந்திரன் Heavy Rain கோலிவுட் வாஷிங்டன் சுந்தர் Congress தூத்துக்குடி Nainar Nagendran Ajith Thoothukudi M.K. Stalin GetOut Modi தமிழகம் தனுஷ் திமுக அரசு டிடிவி தினகரன் Washington Sundar rain திருநெல்வேலி