சென்னையில் நிர்வாண சைக்கோ, இரவு நேரத்தில் அட்டகாசம்!

சென்னையில் நிர்வாண சைக்கோ, இரவு நேரத்தில் அட்டகாசம்!

Views : 1774

சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலை, ஜெ.ஜெ.தெரு, அம்புஜம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா மேம்பாலத்தின் கீழும், ஆழ்வார்ப்பேட்டை பாலத்துக்கு கீழும் மர்ம நபர் சுற்றித் திரிவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்.


பொதுமக்கள் பிடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி விட்டு பயங்கர சத்தத்துடன் சிரிக்கவும் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மர்ம நபரை நெருங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக நிர்வாண சைக்கோவின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்ப்பேட்டையில் தற்போது வரை விலை உயர்ந்த 35 கார்களை சேதப்படுத்தி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.


இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் சுமதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களை நிர்வாண சைக்கோ கற்களால் தாக்கி சேதப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்