135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை ..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை ..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

Views : 1800

திருச்சியில் 135 அடி பெரியார் சிலை அருகில் 150 அடியில் தேவர் சிலை அமைக்க இடம் தேர்வு..! முக்குலத்தோர் அமைப்புகள் அதிரடி..

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், மொத்தம் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கிறது, அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சி மாவட்டத்தில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கும் பணியை முக்குலத்தோர் அமைப்புகள் தொடங்கியுள்ளது. இது குறித்து அனைத்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி.


இது குறித்து திருமாறன் ஜி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது, இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினம் என்றும், தொடர்ந்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு தமிழகத்தில் சிலை அமைக்கப்பட இருக்கும் நிலையில், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களோடு இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் தேவர் அவர்களுக்கு திருச்சியில் அமைய இருக்கும் பெரியார் சிலையை விட உயரமாக சிலை அமைக்கப்படும்.



திருச்சியில் 150அடி உயரத்தில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருக்கும் வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் குறித்த அருங்காட்சியம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவித்த திருமாறன் ஜி, இதற்காக தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்தும் பேசி வருவதாகவும், அனைவரும் அதற்கான ஆதரவை தெரிவித்து வருவதாக கூறினார்.

மேலும் திருச்சியில் தேவர் சிலை அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக, இந்த வாரம் திருச்சி சென்று ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, இடத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 150அடி உயரத்தில் அமைய இருக்கும் தேவர் சிலைக்கான செலவுகளை முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றிணைத்து ஏற்று கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.




JOIN IN TELEGRAM

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 3 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 1 week ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 3 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.