பட்டிமன்ற பேச்சளார் பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை! புதிய தகவல் !!

பட்டிமன்ற பேச்சளார் பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை! புதிய தகவல் !!

Views : 1787

உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை குறித்து சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்பிஏ படித்துள்ள இவர், உலகின் முன்னணி தனியார் வங்கியில் உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பணிகளுக்கிடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார். இவரது தமிழ் பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

குறிப்பாக, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் பாரதி பாஸ்கர் - ராஜா ஆகியோரின் பேச்சுக்குதான் அதிக பாராட்டு கிடைக்கும். இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.



தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து சாலமன் பாப்பையா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். பாரதி பாஸ்கரின் உடல் நிலை தேறி வருவதாக சாலமன் பாப்பையா கூறியுள்ளார். உடல்நிலை முன்னேற்றத்துக்காக சில பயிற்சிகளை மேற்கொள்கிறார். பட்டிமன்றத்தில் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி முழு உடல் நலத்துடன் திரும்பிய உடன் அவர் பட்டிமன்றத்தில் பங்கேற்பார் எனவும் சாலமன் பாப்பையை தெரிவித்துள்ளார்.

22 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பாரதி பாஸ்கர் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நலம் பழைய நிலைக்கு தேறி வருகிறது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 2 weeks ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்