ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!

ind vs pak: டி20 உலகக்கோப்பை : இந்தியாவுக்கு எதிராக வலிமையான அணியை இறக்கிய பாகிஸ்தான்!

Views : 1791

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் விபரம் நேற்று அறிவிப்பட்டது.


தங்களது பலம் பேட்டிங் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ( Babar Azam ) தெரிவித்துள்ளார்.7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பொதுவாக இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இந்தியாவுக்கு எதிராக ஆடும் பாகிஸ்தான் அணிநேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் ஆசாம் (c) முகமது ரிஸ்வான் (wk), ஃபகார் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான் (vc), இமாத் வாசிம், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இன்றைய ஆட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், எங்கள் முக்கிய பலம் பேட்டிங் என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பேட்ஸ்மென் செயல்பட்டு வரும் விதம், எங்கள் பேட்டிங் காரணமாக நாங்கள் சில நல்ல முடிவுகளைத் தருவோம். மேலும் ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படாதது தொடர்பாக பேசும்போது, கடந்த காலத்தில் நாங்கள் செய்ததை மறந்துவிட்டோம், எதிர்காலத்தில் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். இந்தப் போட்டியில் களத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் மேலும் சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் என்று கூறினார்.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தொடங்குகிறது.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்