கொரோனாவுக்கு நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் பலி!

கொரோனாவுக்கு நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் பலி!

Views : 1787

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் கொரோனா பெருந்தொற்றால் தன்னுடைய 61வது வயதில் இன்று உயிரிழந்தார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.



கே.எஸ். ரவிக்குமாரின் துணை இயக்குனராக தன்னுடைய திரைப் பயணத்தை துவங்கிய மனோகர், பின்னர் கோலங்கள், புதுமைப்பித்தன், தென்னவன் போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தான் பணியாற்றும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த மனோகருக்கு தென்னவன் படத்தில் விவேக்குடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சி அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.



அதன்பின் நகுல், சுனைனா நடித்த மாசிலாமணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோகர் வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் அதன்பின் இயக்கினார். இதற்கிடையே 2012ஆம் ஆண்டு இவருடைய மகன் ரஞ்சன், தனியார் பள்ளி ஒன்றில் நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது இவரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



அதன்பின் படம் இயக்குவதை நிறுத்திய மனோகர், என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் பிஸி நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை