சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் - காவல்துறையில் பா.ம.க புகார்!

சூர்யா, ஜோதிகாவைக் கைது செய்யவேண்டும் - காவல்துறையில் பா.ம.க புகார்!

Views : 1927

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. காவல்துறை வன்முறையால் கொல்லப்பட்ட பழங்குடி நபர் ராஜாக்கண்ணுவின் உண்மைக் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. விமர்சன அளவில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில், படத்தில் வன்னியர் சமூக மக்களைக் குறிக்கும் அக்னிகலசம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பா.ம.க சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனையடுத்து, அக்னிகலசம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

அதனையடுத்து, சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யா பதில் எழுதிய நிலையில் இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. சூர்யாவுக்கு எதிராக பா.ம.கவினர் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர். சூர்யா மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவும் வேண்டுமென வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க மாவட்டச் செயலாளர் விநாயகம் தலைமையில் பா.ம.கவினர் சேலையூர் உதவி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், ‘தமிழகத்தில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் ஜெய்பீம் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். படத்தின் இயக்குனர் ஞானவேல்ராஜா, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, ஓசூர் மாநகர காவல் நிலையத்திலும் சூர்யா மீது பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பா.ம.க மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜன், வன்னிய சங்கச் செயலாளர் கணேசன் தலைமையில் பாமகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், ஓசூர் மாநகர காவல் நிலையத்திற்கு சென்று ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சில காட்சிகளில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை கொடுமைப்படுத்துவதுபோல காட்சிப்படுத்தியுள்ளது வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அவதூறாக காட்சிகள் அமைந்துள்ளன. எனவே அவதூறான காட்சிகள் அமைத்து இயக்கிய இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா சூர்யா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 4 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.