சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை!

சூர்யகுமார் யாதவ் காட்டிய வானவேடிக்கை!

Views : 1842



மெல்பேர்ன்: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் கடின இலக்கை நிர்ணயித்துள்ளது,.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.


இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் டாஸில் இருந்தது போன்று இந்திய அணிக்கு தொடக்கம் கிடைக்கவில்லை.



டி20 உலககோப்பை - ஜிம்பாப்வே வெளியேறியது.. பாக். வீழ்த்திய ஜிம்பாப்வே , நெதர்லாந்திடம் வீழ்ந்ததுடி20 உலககோப்பை - ஜிம்பாப்வே வெளியேறியது.. பாக். வீழ்த்திய ஜிம்பாப்வே , நெதர்லாந்திடம் வீழ்ந்தது


தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய போதும், அவரின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முசர்பாணி வீசிய பவுன்சர் பந்தை புல் ஷாட் ஆட முயன்ற ரோகித் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மறுமுணையில் கே.எல்.ராகுல் தொடர்ந்து அதிரடியை காட்டினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்தார்.


மிடில் ஆர்டரில் மிகவும் பலமாக பார்க்கப்பட்ட விராட் கோலி நிதானமாக விளையாடினார். எனினும் அவரின் ரசிகர்களுக்கு இன்று ஏமாற்றமே 25 பந்துகளில் 26 ரன்களை அடித்து துரதிஷ்டவமாக விக்கெட்டை பறிகொடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் வெறும் 3 ரன்களுக்கு வெளியேறி மீண்டும் ஏமாற்றினார்.


இதனால் 13.3 ஓவர்களில் இந்திய அணி 101/4 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் ஜோடி வாணவேடிக்கை காட்டினர். கடைசி வரை நின்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார்.


நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். அவருக்கு நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்த மைதானத்தில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது மிகவும் கடினமாகும்.


JOIN IN TELEGRAM

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.