டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி

டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி

Views : 1885

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.

இதில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி யின் இந்த சிறந்த அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



1.அலெக்ஸ் ஹெல்ஸ் Eng
2.ஜாஸ் பட்லர் ( C/W) Eng
3.விராட் கோலி Ind
4.சூரியகுமார் யாதவ் Ind
5.கிளன் பிலிப்ஸ் NZ
6.சிக்கந்தர் ராசா ZIM
7.சதாப்கான் (All Rounder) PAK
8.சாம் கரன் (All Rounder) PAK
9.நோக்கியா SA
10.மார்க் வுட் Eng
11.ஷாகின் ஷா ஆப்ரிடி PAK
12.ஹர்திக் பாண்டியா Ind

ஐசிசி யின் இந்த பெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹெல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நடப்பு டி20 உலக கோப்பையில் 212 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றொரு தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும். அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நடந்து முடிந்த தொடரில் 225 ரன்கள் அடித்திருக்கிறார்.

நடுவரிசை மூன்றாவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சேர்க்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி இந்த தொடரில் அதிகபட்சமாக 296 ரன்கள் அடித்திருக்கிறார்.


நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடந்து முடிந்த தொடரில் அவர் 239 ரன்கள் விளாசி இருக்கிறார்.

ஐந்தாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கிளன் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 201 ரன்கள் அடித்திருக்கிறார்.


ஆல் ரவுண்டர்கள் நடு வரிசையில் ஆறாவது வீரராக சிக்கந்தர் ராசாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வே சேர்ந்த அவர் நடந்து முடிந்த தொடரில் 219 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

ஏழாவது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த சதாப்கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 98 ரன்களும், பந்துவீச்சில் 11 ரன்களும் அடித்திருக்கிறார்.

ஆல் ரவுண்டராக சாம் கரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்பதாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

10வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் மார்க் வுட், இந்த தொடரில் 9 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.11 ஆவது வீரராக ஷாகின் ஷா ஆப்ரிடி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட் வீழ்த்திருக்கிறார்.

இந்த அணியின் 12 ஆவது வீரராக இந்தியாவின் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 128 ரன்களும் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை