ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம்
Views : 1868
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணமும் டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் அவர் சிறைக்கு சென்றார் என்றும் அதனால்தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார் என்றும் கூறினார்
மேலும் டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர் என்றும் அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள் என்றும் தெரிவித்தார்
டிடிவி தினகரன் ஒரு துரோகி என்றும் அம்மாவுக்கும் துரோகம் செய்தவர் என்றும் அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட