ஐபிஎல் ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகம்..

ஐபிஎல் ஆட்டங்களில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை அறிமுகம்..

Views : 1902

இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய முறை மூலமாக போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதே போன்று ஏற்கனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதிலாக புது பேட்ஸ்மேனை 14வது ஓவர் முடிவதற்குள் கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14 வது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.

11 வீரர்களைக் கொண்ட விளையாடும் அணியை அறிவிக்கும் போதே, மாற்று வீரரையும் அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகளில் மாற்று வீரரை களமிறக்குவது போல, கிரிக்கெட் போட்டிகளிலும் மாற்று வீரரை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடர்களில் ஒன்றான சையது முஸ்தாக் அலி தொடரில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை