பழம்பெரும் மலையாள நடிகர் கொச்சு பிரேமன் காலமானார். அனுபவம் வாய்ந்த மூத்த நடிகரான இவர், டிசம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 68. நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் (1996) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
சுமார் 250 படங்களில் நடித்துள்ள கொச்சு பிரேமனின் நகைச்சுவைகள் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குரு (1997), தென்காசிப்பட்டணம் (2000), பாப்பி அப்பாச்சா (2010) மற்றும் லீலா (2016) உள்ளிட்ட படங்கள் பிரேமனின் நடிப்பில் வெளியாகின. கடைசியாக அவர் ஒரு பப்படவாடா பிரேமம் (2021) படத்தில் நடித்திருந்தார்.
பிரேமனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களவைத் தலைவர் வி.டி.சதீசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.
தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை