ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த திரைப்படம் சாதனை படைத்தது.
மதுரையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா 2 படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பிறகு முதற்கட்ட பணிகளும் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான பூஜை நடைபெறுகிறது. அந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.
தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்