துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

Views : 1922

விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை  மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். மற்றொருபக்கம் அஜித் ரசிகர்கள் அதனை உற்சாகமாக பதிவிட்டுவருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரையரங்கம் ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேவையில்லாத மோதலை தடுக்கவே பேனர் கவரால் மூடப்பட்டது. தற்போது ஸ்பெஷல் ஷோ முடிந்த பிறகு பேனரை மூடிய கவரை நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.




இதனையடுத்து விஜய் பட ஸ்பெஷல் ஷோ திரையிடும்போது துணிவு பேனர் மறைக்கப்படுமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இரு  படங்களின் வெளியீட்டுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. படம் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 2 weeks ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்