Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம்..! விக்ரமன் 2ம் இடம்

Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் 6  டைட்டில் வின்னர் அசீம்..! விக்ரமன் 2ம் இடம்

Views : 1924

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர். தங்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் தமிழின் இறுதிப் போட்டி வரை சென்ற அவர்களில் இப்போது அசீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையொட்டி மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.





அசீம் கோபம் மற்றும் தடித்த வார்த்தைகள் மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உருவாக்கினாலும், அவர் தனித்துவமாக விளையாடியதாக கூறி அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாக்களித்தனர். ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் தங்களின் அமைதி மற்றும் தெளிவான அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்தனர். இருந்தாலும் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனே டிவிட்டர் பக்கத்தில் நேரடியாக ஆதரவு கேட்டார். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி என்றாலும் எளிய மக்களின் குரலையும், வாழ்வியலையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசிக் கொண்டே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட சமூகம் மீது அக்கறை கொண்ட பலரும் விக்ரமனுக்காக பொதுவெளியில் ஆதரவு கேட்டனர். இருந்தபோதும், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக்பாஸ் சீசன் 6 தமிழின் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார்.


அவர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை விட அதிக வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் இறுதிப்போட்டி நிகழ்ச்சி மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன் மற்றும் ஆசீம் ஆகியோரின் கைகளை பிடித்திருந்த கமல்ஹாசன், இறுதியாக அசீம் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் தமிழின் வெற்றியாளருக்கான பரிசுத் தொகையை அசீம் பெற்றுக் கொண்டார்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 2 weeks ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்