திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Views : 1901

திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன.

போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது.

அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது. போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 2 weeks ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்