தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!

தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!

Views : 2043

அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம்.

இது தொடர்பாக, தஞ்சையில் தங்கிருந்த டிடிவி தினகரனை அண்ணாமலையின் ஆலோசகர்கள் அண்மையில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாய் நிற்கும் ஆடிட்டரின் யோசனைப்படியே இந்த சந்திப்புகள் நடந்ததாம்.

“ஈபிஎஸ் கூடாரத்தைக் கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்” என ஆலோசகர்கள் பேசியதைக் கேட்டு தெம்பாகி இருக்கும் தினகரன், அதே தெம்புடன் ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கிறார். இந்தப் பயணத்தின் போது தெற்கில் தினகரன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். இந்தக் கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக் கணக்கில் அமமுகவில் இணைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம்!


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 4 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட