சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

சாதிய பிரிவினைகளை தூண்டும் மாரி செல்வராஜ் - கிருஷ்ணசாமி குற்றசாட்டு!

Views : 779

மாமன்னன் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும், பரபரப்புகளும் இன்னும் அடங்கவில்லை.. படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சர்ச்சைகள் கிளம்பிவிட்டன.

உதயநிதி - வடிவேலுவின் சீன்களை வரவேற்று, சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் தெறிக்கவிடப்பட்டன. ஆனால், இதுவே, அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது. ரத்தினவேலுவாக நடித்த பகத் பாசிலை சில சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்

சோஷியல் மீடியா முழுவதுமே, கடந்த சில நாட்களாகவே, பகத் பாசில் டிரெண்டாகிவிட்டார்.. தேவராகவும், கவுண்டராகவும், வன்னியராகவும் அந்தந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் ரத்தினவேல் சீன்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, 'மாமன்னன்' திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் டைரக்டர் மாரி செல்வராஜ், சம்பந்தமேயில்லாமல், தேவர் மகன் படத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அதிலிருக்கும் கதாபாத்திரம்தான் மாமன்னன் படத்திலும் வந்திருக்கிறது என்றார்.

இது முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கம் கொண்டது... படம் எடுக்க எத்தனையோ கதைக்கருக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும், மறுபடியும் சாதியை வைத்துப் படம் எடுப்பது தேவையில்லாதது.. மாரி செல்வராஜ், நல்ல கதைகளை வைத்துப் படமெடுக்க வேண்டும்.. பகத் பாசில் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். ஆனால், மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்னவேல் பாத்திரத்தை தவறான நோக்கத்துடன் சாதிய பிரிவினைகளை தூண்டும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இது தவறானது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாதிய வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள், வீடியோக்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை