முத்துராமலிங்க தேவர் பற்றி கிருபானந்த வாரியார் வார்த்தைகள்!!

முத்துராமலிங்க தேவர் பற்றி கிருபானந்த வாரியார் வார்த்தைகள்!!

Views : 615

"அண்ணா" மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில் தெய்வ நிந்தனை செய்ததும், அதற்க்கு தேவரின் கண்டிப்பையும் பற்றி அண்ணாமலை அவர்கள் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பேசினார். இதற்கு சில வாரங்கள் முன் தற்செயலாக இந்த நிகழ்வை பற்றி "பல ஆண்டுகளுக்கு முன் கிருபானந்த வாரியார் சுவாமிகள்" கொடுத்த பேட்டி

கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வார்த்தைகள்!!

" 56-ல் மதுரையிலே நிகழ்ந்த முத்தமிழ் மாநாட்டிலே ஒரு அரசியல்வாதி ஞானசம்பந்தரை சற்று குறைவாக பேசினார். அப்பொழுது முத்துராமலிங்க தேவர் பெரிய கிளர்ச்சி செய்து, கோயிலுக்குள்ளே சமய நிந்தனைகள் செய்யக் கூடாது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கோயிலுக்கு வெளியே பொய் பேசிக் கொள்ளுங்கள் என்று தீவிரமாக வீர கர்ஜனை புரிந்தார். அந்த மாநாடு நடந்த பிறகு 2-ம் சவுக்கு மாநாட்டிலே வந்து கலந்து கொண்டார். அப்போது நான் மலேசியாவில் இருந்தேன். பத்திரிகையிலே வந்தது. தேவரும் இதைச் சொன்னார். மதுரையில் கதை நடக்கிறபொழுது மீண்டும் ஒரு முறை இதே மாதிரி சொல்லி சமய சிந்தனைகள் ஆலயங்களுக்குள் நிகழக்கூடாது அதை நாங்கள் பொறுத்துக் கொண்டியிருக்க மாட்டோம் என்று தனக்கே உரிய அழுத்தந்திருத்தமான கருத்துக்ளோடு கண்டனம் தெரிவித்தார்!

மேலும் இதே போன்ற வரலாறை கூறினார்!!

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கும் தேவருக்கும் நெருங்கிய உறவு உண்டு. பாஸ்கர சேதுபதி காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை பற்றி தேவர் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ராமநாதபுரத்திலே ஒரு நாடகம் சமய நிந்தனையோடு நடந்தது. முத்துராமலிங்க தேவருடைய பாட்டனார் இதை கண்டு பொறுக்காமல் அப்போதிருந்த சேதுபதி அவர்களுக்கு ரொம்ப கடினமான ஒரு கடிதம் எழுதினார். ராமநாதபுரம் சேதுபதி அவர்களுக்கு வணக்கம்! தங்கள் ஆட்சியிலே, தங்கள் ஊரிலே தெய்வ நிந்தனையோடு கூடிய நாடகம் நடந்தது என்று கேள்விபடுகிறேன். இப்படி நடக்கலாமா? நடக்க நீங்கள் உடன்படலாமா? அப்படி நடக்க நீங்கள் விடலாமா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் படை திரண்டு வந்து அரண்மனையை இடித்தால் அரண்மனையில் செங்கல் தான் மீதியாகும் என்பதை நினைவுபடுத்துகிறேன் என்று கடிதம் போட்டார். சேதுபதி நெருங்கிய உறவு ஆகையினால் சிரித்து கொண்டே இங்கே சுமுகமாக வாருங்கள் என்று எழுதியிருந்தார்கள். முத்துராமலிங்க பாட்டனார் அங்கே போனார், சேதுபதி அன்போடு வரவேற்றார். ஏன் நீங்கள் இவ்வளவு கடுமையாக கடிதம் எழுதியிருந்தீர்கள்? அதற்கு தேவருடைய பாட்டனார் சொன்னாராம், "மகாராஜா, நான் தவறாக எழுதி விட்டேன். எல்லோரும் ஒன்றாக வந்து அரண்மனையை இடித்தால் ஆளுக்கொரு செங்கல் வரும் என்று எழுதினேன். சிந்தித்து பார்க்காமல் எழுதி விட்டேன். அவர்கள் எல்லோரும் திரண்டு வந்து இடித்தால் ஆளுக்கொரு செங்கல்பொடி பல் துலக்க ஆகும் என்பதை நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள்" என்று அதைவிட கடுமையாக சொன்னார். சேதுபதி சிரித்துக்கொண்டே அவரை கட்டித் தழுவி இனிமேல் இப்படி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். இதை முத்துராமலிங்க தேவரே சொன்னார்...


JOIN IN TELEGRAM

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.