தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி

தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி

Views : 277

கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொடங்கியதில் இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன.

சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து புகழ்பெற்றவர் பீலா ராஜேஷ். சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.


இவரது கணவர் பெயர் ராஜேஷ் தாஸ். சிறப்பு டிஜிபியாக இருந்தவர். பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தன்னுடைய பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றி கொள்ள முடிவு செய்திருக்கிறார்.


ஒருவர் தன்னுடைய பெயரை மாற்ற வேண்டும் எனில் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். ஏனெனில் இதுவரை பல்வேறு அரசு ஆவணங்களில் நமது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும். செய்தித்தாள்களில் கொடுத்துள்ள விளம்பரத்தில் அதில், ”இனி வரும் காலங்களில் டாக்டர். பீலா வெங்கடேசன் என்று மட்டுமே அறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதாவது ராஜேஷ் என்ற கணவர் பெயரை நீக்கி விட்டு தந்தை பெயர் வெங்கடேசனை சேர்த்து கொண்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றியிருக்கிறார். இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

Apr 10, 2024 - 2 weeks ago
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்