மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு

மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு

Views : 190

புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் இரணியலில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

வந்தே பாரத் ரெயில் ஒன்றினை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், வேளாங்கன்னிக்கு பக்தர்கள் செல்ல வாராந்திர ரெயில், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.அதுபோல் நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் ரெயில் நிறுத்தங்கள் குறித்தும் கோரிக்கை வைத்தார். கோவிட் காலத்திற்கு முன்பிருந்த போல் ரெயில் நிறுத்தங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார், குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் தேவை என கேட்டு கொண்டார்.

நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு நான்கு வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்