நல்ல மீன்கள் பார்த்து எப்படி வாங்குவது? கெட்டுப்போன மீனகளை கண்டுபிடிக்கும் முறை

நல்ல மீன்கள் பார்த்து எப்படி வாங்குவது? கெட்டுப்போன மீனகளை கண்டுபிடிக்கும் முறை

Views : 252

எப்போது மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டுமாம்.. கைகளால் தொட்டதுமே பொல பொலவென அமுங்க கூடாது.. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின்மீது, நிறைய ஈக்கள் மொய்த்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம்.

ஒருவேளை மருந்துகளை மீன்கள் மீது தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது.. மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவரக்கூடாது.. கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. வெள்ளை கலரில் கண்கள் இருந்தால் வாங்கக் கூடாது.. மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கவேணடும். வெள்ளை கலராக செவுள்கள் இருக்கக்கூடாது.

மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விறைப்பாக இருக்க வேண்டும். மீனின் கழுத்து பகுதியும் விறைப்பாக இருக்க வேண்டும். நிறைய செதில்களுடன் ரெட் கலரில் இருக்க வேண்டும்..

சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்பார்கள்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும்தான் ஃபார்மலினை பயன்படுத்துவார்கள்.

இந்த ஃபார்மலின் ரசாயனத்தைதான், மீன்கள் மீது பூசி வைப்பார்கள்.. இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஆனால், ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்... ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்லாமல், பல நாட்கள், ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனையாகும் மீன்களை சமைத்து சாப்பிட்டாலும், இந்த உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்..

அதுமட்டுமல்ல, ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகமாம். எனவே, அன்றைய தினம் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது அதிகபட்சம் 2 நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களை சாப்பிட்டால் மட்டுமே போதும் என்கிறார்கள்.


மீன்களை வாங்கும்போது, ENT டெஸ்ட் செய்து வாங்க வேண்டும் என்கிறார்கள் உணவுத்துறை பாதுகாப்பு துறையினர். அதாவது, E for = கண்களாலேயே மீன்களை அறிந்து கொள்வது.. N for முகர்ந்து அறிதல், T for தொட்டு அறிதல் என்பதுதான் இ.என்.டி. சோதனையின் அடிப்படையாகும்.

பார்த்தவுடனேயே மீன்கள் பளபளப்பாகவும், செதில்களில் சேதம் அடையாமலும், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோலவே இருக்க வேண்டுமாம்.. மீனை முகர்ந்து பார்த்தால், நாற்றம் அடிக்ககூடாது.. அதாவது, புதிய மீன்களில் நாற்றம் அடிக்காதாம்.. சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். மீனை தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. இதுபோன்ற மீன்களை வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்று எச்சரிக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.


JOIN IN TELEGRAM

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.