இளையராஜா ஒரு சுயநலவாதி! பணம் வாங்கிக்கொண்டு இசையமைத்தார்!

இளையராஜா ஒரு சுயநலவாதி! பணம் வாங்கிக்கொண்டு இசையமைத்தார்!

Views : 87

இளையராஜா பயோபிக்: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி AI தொழில்நுட்பத்திலும் ரசிகர்கள் இளையராஜா படத்துக்காக பல்வேறு புகைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "இளையராஜா ஒரு அற்பமான மனிதர். எஸ்பிபி வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டன. அப்போது தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னவர்தான் இளையராஜா. அது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா. தமிழ் சமூகத்துக்கு இவர் அப்படி என்ன செய்துவிட்டார். பணம் வாங்கிக்கொண்டு நல்ல இசையை கொடுத்திருக்கிறார். தேவாகூடத்தான் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்.


இளையராஜா பயோபிக்கில் இணையும் சூப்பர் ஹீரோக்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே!
இளையராஜா என்ன கடவுளா?: பாடல்கள் எல்லாம் ஹிட்டானால் இளையராஜாவை கடவுளாக பார்க்க வேண்டுமா. ஏ.ஆர்.ரஹ்மான் வரும்வரை பின்னணி இசை கலைஞர்கள் யாருமே அங்கீகரிக்கப்படவில்லை. இளையராஜா இருந்தவரை எத்தனை பாடகர்கள் இருந்தார்கள் யோசித்து பாருங்கள். ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா, எஸ்பிபி, மனோ இவர்களைத் தவிர்த்து வேறு யாராவது பெரிய பாடகர்களாக இருந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது ஆல்பத்தில் எல்லோருடைய பெயர்களும் இருக்கும். இளையராஜா அதை செய்தாரா. இந்த சமூகத்தில் இளையராஜா என்ன செய்து கிழித்துவிட்டார். அவர் பணம் வாங்கிக்கொண்டு இசையமைக்கிறார் அவ்வளவுதான். அவர் ஒரு சுயநலவாதி.

இளையாராஜா பயோபிக்கில் இணையும் கமல் ஹாசன்.. சம்பவம் உறுதி
ரஹ்மானுக்கு சிக்கலை ஏற்படுத்தினார்: ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் வெளிநாட்டிலிருந்து ஒரு இசைக்கருவியை இங்கே கொண்டு வந்தார். இப்போது கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை. ஆனால் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் கடுமையாகவே இருந்தன. அந்தச் சமயத்தில் இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த இசைக்கருவியை கிட்டத்தட்ட ஒரு வருடம் விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வராதபடி பார்த்துக்கொண்டார்" என்றார்


JOIN IN TELEGRAM

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 4 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

Apr 15, 2024 - 2 weeks ago
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

Apr 14, 2024 - 2 weeks ago
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.